Thursday 27 November 2014

பாதித்த சம்பவம்



                                                                                                          என் பள்ளியில் மிக மிகத் தீவிரமாக தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த நேரமது:

ஒரு மாணவி வகுப்பில் அழுது கொண்டிருந்தாள்....நாங்கள் கணினி பயிற்சிக்கு சென்று வந்திருந்தோம்.

அவளிடம் காரணம் கேட்டோம்

அழுகையினூடே அவள் தெரிவித்தது.

சில காலமாக ஒரு மாணவன் அவளை தொந்தரவு செய்துள்ளான்

தொந்தரவு என்றால் எப்போதும் அவளைப் பார்ப்பது, வகுப்புக்கு வெளியே செல்லும் போது கூடவே வருவது, டியூஷன் செல்லும் போது கூடவே வருவது போன்றவை.

அவளுக்கு அது மன உளைச்சலைத் தந்ததால் இனி பொறுக்க வேண்டாம் என்று பள்ளி முதல்வரிடம் தெரிவித்துள்ளாள்

புகார் கொடுத்து விட்டு வரும் போது இவளைப் பார்த்து எங்கே போனாய் என்று கேட்டுள்ளான்

இவள்அதிர்ச்சியுடன் ஏதும் பேச வாய் எடுக்குமுன்......நீ பிரின்சிபால் மிஸ்ட்ட என்னைப் பத்தி புகார் சொன்னியா என்று சற்று சத்தமாகக் கேட்க இதற்குள் பயிற்சிக்குச் சென்ற அனைவரும் வகுப்பறைக்குள் நுழைய....இவன் காட்டுக் கத்தலாய்....”ஆமாண்டி. நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்...என்ன செய்வ?” என்று கேட்டிருக்கிறான்.

மாணவர்களில் பலர் இப்படிக் கேட்ட மாணவனை விட்டு விட்டு இவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு சென்றுள்ளனர்.

இவள் அதை நினைத்து குடம் குடமாக அழுது கொண்டிருக்கிறாள். ஆனால் அவனோ ஏதோ சினிமாவில் காட்டுவது போல அன்று முழுவதும் மிகவும் ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருந்தான்.. ( இத்தனைக்கும் அவனை அவள் கடுமையாகத் திட்டியிருந்தாள்)

அந்தப் பெண்ணின் அழுகை முகத்தில் நான் பார்த்தது

1. இந்த நிகழ்வு எப்படி மற்றவர்கள் முன் எடுத்துக் கொள்ளப்படும்?

2. இவளின் பெற்றோர் அவனை விட்டுவிட்டு இவளைத்தானே திட்டுவார்களா?


                             

No comments:

Post a Comment