Sunday 21 September 2014

தேர்வு நினைவுகள்

போன வருடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்காக அதிகாலை எழுந்து பள்ளிக்குக் கிளம்பும் முன் என் அம்மாவின் ஆசை முத்தங்களை வாங்கிக் கொண்டுஅம்மாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றோம்.

தேர்வறை திறக்கப்படும் வரை வாசலில் காத்திருந்து என்னை வழியனுப்பிச் சென்றாள் அம்மா...அம்மாவின் முகத்தைப் பார்த்துவிட்டு தேர்வு எழுத் போனதில் அலாதி அன்பும் பிரியமும்...தேர்வு நாட்களில் என் தோழிகள் எதையோ பற்றி மிகத் தீவிரமாக பேசிக்கொண்டிருப்பார்கள்...புதர் தலை, கல் பெஞ்ச் என்று ஒன்றிரண்டு வார்த்தைகள் காதில் விழுந்தது...அதைக் கேட்க ஆர்வம் எழுந்ததில்லை..

அறிவியல் தேர்வு வீடு வந்த அன்று அம்மா என்னிடம் சொன்னார்...பள்ளியில் ஒரு பையனும் பெண்ணும் ( வேறு பள்ளியில் இருந்து தேர்வு எழுத வந்தவர்கள்) அருகருகே கல்பெஞ்ச் ஓரத்தில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருந்ததாகவும் வந்திருந்த அனைத்து ப் பெற்றோர்களும் அருவருப்பாகவும், பிடிக்காமல் பார்த்ததாகவும் கூறினார்....( additional information)  அவன் தலை புதர் போலவும் இருந்ததாம். என் தோழிகள் பேசிக்கொண்டதற்கு ஓரளவு க்கு அர்த்தம் புரிந்தது.

.கடைசித் தேர்வன்று என்னிடம் கூப்பிட்டுக் காண்பித்தார் அம்மா.. இந்த உலகம் மறந்து அப்படி அளவளாவிக் கொண்டுருந்தார்கள்.. எனக்கே சந்தேகம் வந்தது...அவர்கள் தேர்வில் தேறுவார்களோ என்று....கொஞ்சம் அருவருப்பாகவும் இருந்தது.அம்மாவிடம் அங்கே பார்க்காமல் போய் வேலைக்குப் போற வேலையைப் பாருங்கம்மா என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டுப் போனேன். வழக்கம் போல் ஒரு புன்னகையோடு என்னைவிட்டு அகன்று போனார்.

அவர்கள் வீட்டில் எப்படி இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பார்கள்? அவர்கள் பெற்றோர்களுக்கு இது தெரியுமா தெரியாதா? பல கேள்விகள் தான் என்னுள்...

இந்த வயதில் இதெல்லாம் தோன்ற யார் காரணம்?  ஊடகங்களா?....

உன்னால் முடியும் தம்பியில் ஒரு பாடல்....அக்கம் பாருடா சின்ன ராசா...ஆகாசப்பார்வை என்ன சின்ன ராசா......ஞாபகம் வந்தது.....