Friday 13 November 2015

கடவுளைக் கண்டேன்

1. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..என்ற வள்ளுவரின் குறள் உண்மையாக வேண்டும். வங்கியில் கிரடிட் ,டெபிட் கார்டுகள் இவர்களுக்கு முதன்மையாக வழங்கப்பட்டு, நாட்டின் முதல் தரத்தில் இவர்கள் வைக்கப் பட வேண்டும்.இவர்களுக்கே வங்கிக்கடன்,போக்குவரத்து இலவசம் என்று அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்...( போலி விவசாயிகள் இருந்தால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 20வருடம் சிறை தண்டனை)



2. முதல் வகுப்பிலிருந்தே சட்டத்தின் அனைத்து நுணுக்கங்களும் கற்பிக்கப்பட வேண்டும்.

3. மாநிலத்தின் மொழிகள் கட்டாயமாக கற்றிருத்தல் வேண்டும்.

4. குறிப்பிட்ட இலக்குக்கு மேல் சொத்து உள்ளவர்களின் உபரி வருமானத்தை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.( ஒருவர் இத்தனை கோடி தான் சொத்து வைத்து இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து விட வேண்டும்.)

5. அனைத்துப் பணிகளும் அரசுடமையாக்கப் பட வேண்டும். (அமைச்சர், ஆட்சியர்,அலுவலர் என்று எந்த பாகுபடும் இல்லாமல் அவரவர் வேலைக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்)

6. பெண்களுக்கு எதிரான வன்முறை செய்பவர்கள் யாராக இருந்தாலும் நாடு கடத்தப்பட்டு விடுமுறை அற்ற வேலை பார்க்க வைக்க வேண்டும்.

7. நமது நாட்டு உணவுகளின் மேன்மைகளை எடுத்துரைத்து, நம் மக்கள் நம் உணவுகளை மட்டும் உண்ண வைக்க வேண்டும் ( உதாரணம் பாதாம் பருப்பு விடுத்து கடலை..ஓட்ஸ் விடுத்து கேழ்வரகு..கோக்,பெப்ஸிக்கு பதில் இளநீர்,பதநீர்)

8. அறிவியல், நிலவியல், கணினி, மருத்துவம், விஞ்ஞானம் என்று அனைத்துத் துறைகளும் 2020 க்குள் அதன் உச்ச நிலையை அடைந்திருக்க வேண்டும்.



9.கல்லூரி மாணவர் என்ற பருவத்திற்கு வந்த பிறகு வாரத்தின் இறுதியில் நாட்டுக்கு என்ன வேலை செய்ய முடியுமோ அதனை செய்து தர வேண்டும்...(இதனை கட்டாயப் பணியாக்க வேண்டும்)

10 இந்திய ரூபாயின் ஒரு ரூபாய்க்கு 100 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இந்தியாவின் ரூபாய் மதிப்பு உயரணும்

********************************************************************************

கனவு காணுங்கள் என்றார்...எங்கள் விடிவெள்ளி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்...அதைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் வேலை பார்த்தால் கடவுளைக் கண்டேன்...

நானே நினைக்க வில்லை. நல்ல திட்டங்கள் என் மனதில் எழுந்து கொண்டே இருந்தது..நன்றி என்னை இணைத்த அப்பாவிற்கு( வாய்ப்பு வழங்கிய கில்லர்ஜி அங்கிளுக்கும்)

*********************************************************

1.http://vishcornelius.blogspot.com/2015/11/blog-post_12.html

2.http://www.gunathamizh.com/2015/11/05112015.html

3.http://bharathinagendra.blogspot.in/

4.http://sooryanilaa.blogspot.in/

5.http://naachiyaar.blogspot.in/

6.http://kavipriyanletters.blogspot.com/

7.http://isaikarukkal.blogspot.in/

8.http://sunshinesignatures.blogspot.in/

9.http://piriyasaki.blogspot.in/

10.http://chollukireen.com/

*********************************************************************************

 மழைக்கென விடுமுறை விட்டிருந்தாலும் பாடங்கள் நிறைய இருந்ததால் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது..( மன்னிக்க கில்லர்ஜி அங்கிள்)

No comments:

Post a Comment