Saturday 29 November 2014

தூய்மை இந்தியா( தூசி இந்தியா)

எங்காவது யாராவது ஒரு நிகழ்ச்சி நடத்தினால் உடனே அதை பின்பற்றுவது போல் காண்பித்துக் கொள்வதில் தான் நம் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம்...ஆசை....அடடா..

அதைத் தான் என் பள்ளியும் செய்தது. அந்த அழகிய கொடுமையைக் கேளுங்களேன்

என் பள்ளி ஆயாக்களை வைத்து மிகக் கடுமையாக வேலை வாங்கி ஓரளவுக்குத் தூய்மையாகத்தான் இருக்கும். ( எங்களைப் போல் பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவர்கள் தூய்மை கடைபிடிப்பது மிகப் பெரிய வல்லரசைக் கட்டி ஆள்வது போலத்தான்) சரி நிகழ்ச்சிக்கு வருவோம்

அன்று.....

அனைத்து ஆசிரியர்களும் ஒரு சிறிய பாலிதீன் கவரில் குப்பைகளைக் கொண்டு வந்தனர். அதைக் பார்த்ததும் எனக்குள் குழப்பமாக இருந்தது. ( பிரேயருக்கு முன்)

எப்போதும் தூய்மையான மைதானத்தில் நின்று பிரேயர் பாடும் நாங்கள் அன்று சிறிது குப்பைகளுக்குள் நின்று பாடினோம்.


வழக்கம் போல் அசெம்பளி ஆரம்பிக்கப்பட்டது. நமது பாரதப்பிரதமர் தூய்மை இந்தியா என்று சொல்லி இருக்கிறார். எனவே நாமும் தூய்மையாக இருக்க வேண்டும். நமது சுற்றுப்புறத்தை நாம் தூய்மையாக  வைத்துக் கொள்ள பாடுபட(? )வேண்டும் என்று ஒரு நீநீநீண்ண்ண்ண்ண்ண்ட பிரசங்கம் செய்தார். ( தூய்மைக்கும் அவர் பிரச்ங்கத்திற்கும் அவ்வப்போது சம்மந்தம் இருக்கிறார்போல் பார்த்துக் கொண்டார்.)

இப்போது நாம் தூய்மை செய்யப் போகிறோம் என்று சொல்லிவிட்டு.. மேலும் கொண்டுவந்திருந்த குப்பைகளை ஆங்காங்கே தூவி விட்டதோடு மாணவர்கள் சிலரை சாக்லேட்  சாப்பிட வைத்து அதையும் அங்கேயே போட வைத்தார்கள்

 (மற்ற நேரத்தில் தெரியாமல் ஒரு சிறு காகிதம் போட்டால் கூட” உங்களுக்கு யார் மீதும் இரக்கம் இல்லையா? ஒருவர் இதனை தூய்மை செய்ய என்ன பாடுபடுவார்?” என்று தேர்வு சமயங்களிலும் நிற்க வைத்து அட்வைசி நேரம் தின்பார்கள்.

ஆனால்  பல மாணவர்கள் முடிந்த அளவு தங்கள் பைகளில் இருந்த குப்பைகளைக் கொண்டு வந்து போட்டனர். பிறகு ஒரு ஆசிரியர் காபி குடித்து அங்கேயே பேப்பர் கோப்பைகளைப் போட்டார.

இப்படியாக போட்டவைகளை மாணவர்களே அள்ளினர். பல நிருபர்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் பணிபுரியும் அண்ணன்களும் சித்தப்பாக்களும் அதனை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மாணவிகளை  ” பாப்பா”  என விளித்து அப்படி பார்..இப்படித்திரும்பு...அங்கே பார்த்து நில் என்று பல்வேறு கட்டளைகளோடு...

மாணவ மணிகளும் எங்கே தனது புகைப்படம் அல்லது வீடியோவை தூய்மை இந்தியா திட்டம் அறிவித்த பிரதமர் மோடி அவர்களே கண்ணுற்று பாராட்டப் போவது போலவே “போஸ்” கொடுத்துக் கொண்டிருந்தனர்.  பல பேர் இரண்டு பீரியட் வீணானது குறித்து மகிழ்வுடன் காணப்பட்டனர். ஒரு மாணவன் கொரில்லாவிடமிருந்து தப்பித்தேன் என்று சப்தம் போட்டு சொல்லிக் கொண்டே  மகிழ்வாகக் காண்ப்பட்டான்.

( எங்கள் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்கள் அப்பா அம்மா வைத்த பெயர்தவிர இப்படியும் சில அன்பு வார்த்தைகளால் மாணவ மணிகளால் நாமகரணம் சூட்டப்பட்டு அன்போடு அழைக்கப்படுவார்கள் )

ஒரே ஒரு நன்மை மாணவர்கள் பலரில் தங்கள் பைகளை சுமந்து மட்டும் தான் வருவார்கள் அதனுள் என்ன இருக்கிறது என்று அவர்களுக்கே தெரியாது. அன்று அதைக் கண்டு” தெளிந்தனர்.”

ஏன் இந்த வேண்டாத வெட்டி வேலை?

(மீடியாக்கள் பல செய்திகளை இப்படித்தான் வெளியிடுகிறதோ?)

மறுநாள் அவ்ளோ பெரிய செய்தித்தாளில் ஒரு சிறிய (வள்ளுவரின் திருக்குறளை விடச் சிறிதாக ) செய்தி வந்ததால் இவர்கள் நாட்டுக்கோ அல்லது எங்களுக்கோ அறிவிக்க விரும்புவதும் தெரிவிக்க விரும்புவதும் என்ன?
 பொதுத் தேர்வுக்குத் தயாராகும் நிலையில் எங்களுக்கு இந்த நேரத்தை வீணடித்தது சரியா? ( படிக்க என்று நேரம் ஒதுக்கி விட்டு அந்த நேரத்தை இவர்களே பறித்துக் கொண்டார்களே)

இதையே நாங்கள் மட்டும்செய்திருந்தால் நீ எல்லாம் எதுக்கு ஸ்கூல் வரே????சே! வெட்டி தெண்டம் என்று திட்டும் இவர்களை யார் வெட்டி தெண்டம் என்று திட்டுவார்கள்?????

 
                                            

Thursday 27 November 2014

பாதித்த சம்பவம்



                                                                                                          என் பள்ளியில் மிக மிகத் தீவிரமாக தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த நேரமது:

ஒரு மாணவி வகுப்பில் அழுது கொண்டிருந்தாள்....நாங்கள் கணினி பயிற்சிக்கு சென்று வந்திருந்தோம்.

அவளிடம் காரணம் கேட்டோம்

அழுகையினூடே அவள் தெரிவித்தது.

சில காலமாக ஒரு மாணவன் அவளை தொந்தரவு செய்துள்ளான்

தொந்தரவு என்றால் எப்போதும் அவளைப் பார்ப்பது, வகுப்புக்கு வெளியே செல்லும் போது கூடவே வருவது, டியூஷன் செல்லும் போது கூடவே வருவது போன்றவை.

அவளுக்கு அது மன உளைச்சலைத் தந்ததால் இனி பொறுக்க வேண்டாம் என்று பள்ளி முதல்வரிடம் தெரிவித்துள்ளாள்

புகார் கொடுத்து விட்டு வரும் போது இவளைப் பார்த்து எங்கே போனாய் என்று கேட்டுள்ளான்

இவள்அதிர்ச்சியுடன் ஏதும் பேச வாய் எடுக்குமுன்......நீ பிரின்சிபால் மிஸ்ட்ட என்னைப் பத்தி புகார் சொன்னியா என்று சற்று சத்தமாகக் கேட்க இதற்குள் பயிற்சிக்குச் சென்ற அனைவரும் வகுப்பறைக்குள் நுழைய....இவன் காட்டுக் கத்தலாய்....”ஆமாண்டி. நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்...என்ன செய்வ?” என்று கேட்டிருக்கிறான்.

மாணவர்களில் பலர் இப்படிக் கேட்ட மாணவனை விட்டு விட்டு இவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு சென்றுள்ளனர்.

இவள் அதை நினைத்து குடம் குடமாக அழுது கொண்டிருக்கிறாள். ஆனால் அவனோ ஏதோ சினிமாவில் காட்டுவது போல அன்று முழுவதும் மிகவும் ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருந்தான்.. ( இத்தனைக்கும் அவனை அவள் கடுமையாகத் திட்டியிருந்தாள்)

அந்தப் பெண்ணின் அழுகை முகத்தில் நான் பார்த்தது

1. இந்த நிகழ்வு எப்படி மற்றவர்கள் முன் எடுத்துக் கொள்ளப்படும்?

2. இவளின் பெற்றோர் அவனை விட்டுவிட்டு இவளைத்தானே திட்டுவார்களா?


                             

Tuesday 25 November 2014

இஞ்ஜினியரிங்

இன்றைய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் கனவுப் படிப்பு

எல்லாப் பள்ளிகளையும் போலவே எங்கள் பள்ளியிலும் பொறியியல் படிப்பிற்கான வழிகாட்டுதல் வகுப்பு நடந்தது.

என்ன நடக்கிறது என்று பார்ப்போமே என்று கலந்து கொண்டேன்.

நான் எதிர்பார்த்தது :

இஞ்ஜினியரிங் ல்

  என பல பிரிவுகள் உண்டு

இதில் என்னென்ன பிரிவுகளில் எது சார்ந்த படிப்புகள் கற்பிக்கப் படுகின்றன ? அவற்றின் பயன்பாடுகள் , அவை எந்த வகையில் நமக்கு உதவும்? அவற்றின் அவசியம், வருங்காலத் தேவைகள், எந்தக் கல்லூரியில் சிறந்த கல்வித்திட்டமும் பாடத்திட்டமும் உள்ளது?  போன்ற தகவல்கள் தரப்படும் என்று எதிர்பார்த்துச் சென்றேன்.

ஆனால் அங்கு நடந்தது:

இஞ்ஜினியரிங் எந்த கல்லூரியில் படித்தால் கேம்பஸ் இண்டர்வியூ உள்ளது?

எந்த இஞ்ஜினியரிங் படித்தால் என்ன சம்பளத்தில் வேலை கிடைக்கும்?

எந்த இஞ்ஜினியரிங் சம்பளம் அதிகம்?

நுழைவுத்தேர்வுக்கு எந்த  அகாடமியில் படித்தால் செலவு குறைவாக இருக்கும்?( அவர்களிடம் தான் படிக்கணுமாமாமாமாம்)

இப்படி பணம் ....பணம்.....பணம்.....என்று பணம் சம்பந்தமாகவே ஓடியது அந்த வழிகாட்டுதல்(?????!!!!!!) வகுப்பு

இன்றைய சமுதாயத்தினர் அனைவரும் பணம் சார்ந்தே யோசித்து , பணம் சார்ந்தே நின்று, பணம் சார்ந்தே நடந்து பணம் சார்ந்தே செயல்படுகின்றனர்

அதில் பள்ளி மாணவர்களும் விதிவிலக்கல்ல

ஆனால் இது TOOOOOOO MUCH வாகவே என் மனதிற்குப் பட்டது.

நான் எதிர்பார்த்த எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

அதெற்கென அம்மாவிடம் பெற்று வந்து கட்டிய தொகையான 200 ம் மகா வீண்.

அடடா.!.என்னையும் பணம் பற்றி சிந்திக்க வைத்து விட்டார்களே....???