Friday, 24 October 2014
Wednesday, 22 October 2014
இது காதலா?
நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துகொண்டுயிருக்கிறேன் என் பள்ளியில் ஒரு சம்பவம்:
வெளியில் இருந்து பார்பதற்க்கு பிரம்மன்டம்மாக இருகும் எங்கள் பள்ளியின் உள்ளே நுழைந்த போது என்னுள் ஹாரிபாட்டர் ஹாக்குவர்ட்ஸ் ஸ்கூலில் நுழைந்தது போல மிகவும் பெருமிதமாக இருந்தது.
ஆனால் நுழைந்து ஓரிரு மாதங்களில் அதன் பிரமாண்டம் தந்த ஆச்சரியம் அனைத்தும் அற்பமாய் மாறிப்போனது.
(இந்த நேரத்தில் நான் என்னைப்பற்றிச் சில விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும்
நான் தமிழ் கலாசாரம், பண்பு...போன்ற சில ஏற்றுக் கொள்ளக் கூடிய பழமையான பழக்கங்களோடு வளர்ந்தேன். எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டியும் இல்லை...புத்தகம் புத்தகம் மட்டுமே எங்கள் பொழுதும் ...போக்கும்).
என்னுடைய பழைய பள்ளியின் தலைமைஆசிரியர்(முதல்வர்) நிறையக் கட்டுப்பாடுகளுடன் மிகவும் கண்டிப்போடு கூடிய கண்ணியத்துடனும் பள்ளியை நிர்வகித்து வந்ததால்...தவறுகள் ...சில சமயம் குறைக்கப்பட்டும் பல சமயங்கள் மறைக்கப்பட்டும் இருந்தன. அவற்றை ஆராயும் நோக்கு எனக்கு இல்லாததா;ல் அவற்றைப்பற்றி சரியாகத் தெரியாது.
ஆனால் இங்கு அந்த கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி மேற்கத்திய கலாசாரத்தோடு ஒட்டிப்பிறந்தவர்கள் போல் இயங்கி வந்தனர். மாணவர்கள் அடிக்கும் கூத்து தாங்க முடியாது. ஆசிரியர்களுக்கு கோபம் ஏற்பட்ட போதும் பள்ளி நிர்வாகத்திற்கும் அவர்கள் தரும் சொற்ப கூலியும் போய்விடக்கூடாதே என்ற அச்சத்திலும் யாரையும், எதற்கும் கண்டிப்பதில்லை.
(எங்கள் பள்ளியின் முக்கியமான விதி மாணவர்களை அடிக்கவோ திட்டவோ கூடாது). ஆனால் பெற்றோர்களிடம் மட்டும் வாய் கிழியக் கிழிய வியாக்கியானம் பண்ணுவார்கள்.
மாணவர்கள் ஒரு பக்கம் என்றால் மாணவிகள் அடிக்கும் கூத்தைஎன்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை
ஆண், பெண் நட்பு சரியானது தான் என்று பலர் வாதிடக் கேட்டிருக்கிறேன். எனக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு. ஆனால் இங்கு வந்த பிறகு அதனை ஏற்கும் மனநிலை சுத்தமாகப் பறி போய் விட்டது.
ஏனெனில் அவர்கள் கை கோர்த்துக் கொண்டு சுற்றுவதும், வகுப்பில் ஆசிரியர்கள் இருந்தாலும் இல்லாதது போலவே பாவித்து அவர்கள் அடிக்கும் கூத்தையும் , இதயத்தில் அம்பு விடும் குறியீடோடு அவர்கள் பரிமாறிக் கொள்ளும் பிறந்த நாள் பரிசுகளையும், பிப்ரவரி 14 அன்று பள்ளி படும் பாட்டையும் பார்த்தால் யாருக்குத்தான் ஆண், பெண் நட்பு சரியெனத் தோன்றும்?
என் அம்மாவும் கூட சூடத்தில் சத்தியம் அடித்துச் சொன்னால் கூட நம்ப மாட்டார் போல.
இந்த வயதில் வரும் உணர்வுகள் காதலாக இருக்குமா? இது இவர்களுக்குப் புரியுமா? இதற்கு யார் காரணம்? ?
பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைப்பதெல்லாம் எதற்கோ? என்ற வேதனை என்னை துளைத்து எடுக்கிறது.
ஆனால் நானும் இப்போது கண்டும் காணாமல் வலம் வருகிறேன். எனது பிரமாண்ட மான(?!) பள்ளியில்.
வெளியில் இருந்து பார்பதற்க்கு பிரம்மன்டம்மாக இருகும் எங்கள் பள்ளியின் உள்ளே நுழைந்த போது என்னுள் ஹாரிபாட்டர் ஹாக்குவர்ட்ஸ் ஸ்கூலில் நுழைந்தது போல மிகவும் பெருமிதமாக இருந்தது.
ஆனால் நுழைந்து ஓரிரு மாதங்களில் அதன் பிரமாண்டம் தந்த ஆச்சரியம் அனைத்தும் அற்பமாய் மாறிப்போனது.
(இந்த நேரத்தில் நான் என்னைப்பற்றிச் சில விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும்
நான் தமிழ் கலாசாரம், பண்பு...போன்ற சில ஏற்றுக் கொள்ளக் கூடிய பழமையான பழக்கங்களோடு வளர்ந்தேன். எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டியும் இல்லை...புத்தகம் புத்தகம் மட்டுமே எங்கள் பொழுதும் ...போக்கும்).
என்னுடைய பழைய பள்ளியின் தலைமைஆசிரியர்(முதல்வர்) நிறையக் கட்டுப்பாடுகளுடன் மிகவும் கண்டிப்போடு கூடிய கண்ணியத்துடனும் பள்ளியை நிர்வகித்து வந்ததால்...தவறுகள் ...சில சமயம் குறைக்கப்பட்டும் பல சமயங்கள் மறைக்கப்பட்டும் இருந்தன. அவற்றை ஆராயும் நோக்கு எனக்கு இல்லாததா;ல் அவற்றைப்பற்றி சரியாகத் தெரியாது.
ஆனால் இங்கு அந்த கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி மேற்கத்திய கலாசாரத்தோடு ஒட்டிப்பிறந்தவர்கள் போல் இயங்கி வந்தனர். மாணவர்கள் அடிக்கும் கூத்து தாங்க முடியாது. ஆசிரியர்களுக்கு கோபம் ஏற்பட்ட போதும் பள்ளி நிர்வாகத்திற்கும் அவர்கள் தரும் சொற்ப கூலியும் போய்விடக்கூடாதே என்ற அச்சத்திலும் யாரையும், எதற்கும் கண்டிப்பதில்லை.
(எங்கள் பள்ளியின் முக்கியமான விதி மாணவர்களை அடிக்கவோ திட்டவோ கூடாது). ஆனால் பெற்றோர்களிடம் மட்டும் வாய் கிழியக் கிழிய வியாக்கியானம் பண்ணுவார்கள்.
மாணவர்கள் ஒரு பக்கம் என்றால் மாணவிகள் அடிக்கும் கூத்தைஎன்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை
ஆண், பெண் நட்பு சரியானது தான் என்று பலர் வாதிடக் கேட்டிருக்கிறேன். எனக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு. ஆனால் இங்கு வந்த பிறகு அதனை ஏற்கும் மனநிலை சுத்தமாகப் பறி போய் விட்டது.
ஏனெனில் அவர்கள் கை கோர்த்துக் கொண்டு சுற்றுவதும், வகுப்பில் ஆசிரியர்கள் இருந்தாலும் இல்லாதது போலவே பாவித்து அவர்கள் அடிக்கும் கூத்தையும் , இதயத்தில் அம்பு விடும் குறியீடோடு அவர்கள் பரிமாறிக் கொள்ளும் பிறந்த நாள் பரிசுகளையும், பிப்ரவரி 14 அன்று பள்ளி படும் பாட்டையும் பார்த்தால் யாருக்குத்தான் ஆண், பெண் நட்பு சரியெனத் தோன்றும்?
என் அம்மாவும் கூட சூடத்தில் சத்தியம் அடித்துச் சொன்னால் கூட நம்ப மாட்டார் போல.
இந்த வயதில் வரும் உணர்வுகள் காதலாக இருக்குமா? இது இவர்களுக்குப் புரியுமா? இதற்கு யார் காரணம்? ?
பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைப்பதெல்லாம் எதற்கோ? என்ற வேதனை என்னை துளைத்து எடுக்கிறது.
ஆனால் நானும் இப்போது கண்டும் காணாமல் வலம் வருகிறேன். எனது பிரமாண்ட மான(?!) பள்ளியில்.
தமிழ் படும் பாடு
1.” கத்தியின்றி ரத்தமின்றி ” ____ என்ற பாடலை எழுதியவர் யார்?
நாமக்கல் கவிஞர் என்று நான்காம் வகுப்பிலேயே படித்து விட்டேன்
.( இந்த விஷயம் நாலாப்பு பிள்ளைக்குக் கூடத் தெரியும். ஆனால் எனக்கு பத்தாம் வகுப்பு தமிழ் எடுத்த ஆசிரியருக்கு ஏனோ தெரியவில்லை).
பாரதியார் என்று என்னிடம் பலமாக வாதாடினார்.கண்ணை மூடிக் கொண்டு சூரியனை காணவே இல்லை என்று சொல்பவரிடம் சண்டைக்கா போக முடியும்? நான் ஒருவேளை மீண்டும் வலியுறுத்திச் சொன்னால் என் மதிப்பெண் குறைக்கப்படலாம். அல்லது மாணவர்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்படலாம்.( அட அவங்களுக்கும் தான் தெரியலையே....இந்தம்மா சொல்றது தான் வேதம்னு நினைச்சாங்க)
2. ”அயோத்திதாசர் சென்னையில் உள்ள மக்கிமா நகரில் 1845 ஆம் ஆண்டு மே திங்கள் பிறந்தார். ...” இது பத்தாம் வகுப்புத் துணைப்பாடத்தில் உள்ள வரிகள்..( பக்கம் 213)
இதனை என் தமிழ் அம்மா விளக்கி 1845 ஆம் ஆண்டு மே மாதம் திங்கட்கிழமை பிறந்தார் என்று கூறினார்...
(அய்யோ...அய்யோ....!!)
எனக்குச் சிரிப்பு தாங்க வில்லை...
அது எந்தத் திங்கள் கிழமை அம்மா ? மாதத்தில் 4 திங்கள் உள்ளதே? என்று நக்கலாகத்தான் கேட்டேன்.
வெறும் திங்கள் என்று தந்தால் அது முதல் திங்களாகத்தான் இருக்கும் என்று விளக்கம் வேறு தந்தார்.
3. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில்... குலசேகர ஆழ்வார் எழுதிய “மீன் நோக்கும் நீள்வயல் சூழ்...” என்று தொடங்கும் பாடல் அவர்களிடம் பட்ட பாடு இருக்கிறதே.... அடடா...அடடா...
மீன்கள் வயலுக்கு கிணற்றிலிருந்து பம்பு செட்டு மூலமா வந்து இறைவனை வேண்டும். அதுதான் வித்துவக் கோட்டையின் சிறப்பு ..என்று அந்த அர்த்தத்தைக் கொன்று விட்டார்....
குல சேகர ஆழ்வார் காலத்தில் ஏதுங்க பம்பு செட்டு?
பாடலின் அர்த்தம் கூட கீழே விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.... ஆனால் அதனைக்கூடத் தெளிவாகச் சொல்லாமல்..போனார் அந்தத் தமிழ் அம்மா...
குறைந்த கூலிக்குக் கிடைக்கிறார்கள் என்று ஏதோ படித்தவர்களை , தமிழில் சிறிதும் ஆர்வம் இல்லாதவர்களைத் தான் நிர்வாகம் நியமித்துள்ளது...
அய்யோ...... சரியான விளக்கத்தை சொல்லலாமே என்று நான் என் சக மாணவிகளுக்கு விளக்க....அவர்களோ என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு அதனை ஏற்கத் தயாராய் இல்லை.
இப்படித்தான் ”””டமில்”””””” ஆசிரியர்களிடம் நம் தமிழ் படாதபாடு படுகிறது...இவர்களிடம் படித்தால் தமிழ் எப்படி வளரும்???
பாரதியார் தான் என் நினைவில் வந்தார்..”மெல்லத் தமிழ் இனி......????????”
நாமக்கல் கவிஞர் என்று நான்காம் வகுப்பிலேயே படித்து விட்டேன்
.( இந்த விஷயம் நாலாப்பு பிள்ளைக்குக் கூடத் தெரியும். ஆனால் எனக்கு பத்தாம் வகுப்பு தமிழ் எடுத்த ஆசிரியருக்கு ஏனோ தெரியவில்லை).
பாரதியார் என்று என்னிடம் பலமாக வாதாடினார்.கண்ணை மூடிக் கொண்டு சூரியனை காணவே இல்லை என்று சொல்பவரிடம் சண்டைக்கா போக முடியும்? நான் ஒருவேளை மீண்டும் வலியுறுத்திச் சொன்னால் என் மதிப்பெண் குறைக்கப்படலாம். அல்லது மாணவர்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்படலாம்.( அட அவங்களுக்கும் தான் தெரியலையே....இந்தம்மா சொல்றது தான் வேதம்னு நினைச்சாங்க)
2. ”அயோத்திதாசர் சென்னையில் உள்ள மக்கிமா நகரில் 1845 ஆம் ஆண்டு மே திங்கள் பிறந்தார். ...” இது பத்தாம் வகுப்புத் துணைப்பாடத்தில் உள்ள வரிகள்..( பக்கம் 213)
இதனை என் தமிழ் அம்மா விளக்கி 1845 ஆம் ஆண்டு மே மாதம் திங்கட்கிழமை பிறந்தார் என்று கூறினார்...
(அய்யோ...அய்யோ....!!)
எனக்குச் சிரிப்பு தாங்க வில்லை...
அது எந்தத் திங்கள் கிழமை அம்மா ? மாதத்தில் 4 திங்கள் உள்ளதே? என்று நக்கலாகத்தான் கேட்டேன்.
வெறும் திங்கள் என்று தந்தால் அது முதல் திங்களாகத்தான் இருக்கும் என்று விளக்கம் வேறு தந்தார்.
3. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில்... குலசேகர ஆழ்வார் எழுதிய “மீன் நோக்கும் நீள்வயல் சூழ்...” என்று தொடங்கும் பாடல் அவர்களிடம் பட்ட பாடு இருக்கிறதே.... அடடா...அடடா...
மீன்கள் வயலுக்கு கிணற்றிலிருந்து பம்பு செட்டு மூலமா வந்து இறைவனை வேண்டும். அதுதான் வித்துவக் கோட்டையின் சிறப்பு ..என்று அந்த அர்த்தத்தைக் கொன்று விட்டார்....
குல சேகர ஆழ்வார் காலத்தில் ஏதுங்க பம்பு செட்டு?
பாடலின் அர்த்தம் கூட கீழே விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.... ஆனால் அதனைக்கூடத் தெளிவாகச் சொல்லாமல்..போனார் அந்தத் தமிழ் அம்மா...
குறைந்த கூலிக்குக் கிடைக்கிறார்கள் என்று ஏதோ படித்தவர்களை , தமிழில் சிறிதும் ஆர்வம் இல்லாதவர்களைத் தான் நிர்வாகம் நியமித்துள்ளது...
அய்யோ...... சரியான விளக்கத்தை சொல்லலாமே என்று நான் என் சக மாணவிகளுக்கு விளக்க....அவர்களோ என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு அதனை ஏற்கத் தயாராய் இல்லை.
இப்படித்தான் ”””டமில்”””””” ஆசிரியர்களிடம் நம் தமிழ் படாதபாடு படுகிறது...இவர்களிடம் படித்தால் தமிழ் எப்படி வளரும்???
பாரதியார் தான் என் நினைவில் வந்தார்..”மெல்லத் தமிழ் இனி......????????”
Sunday, 5 October 2014
தவறான பாடம்
பிளஸ் 2 வில் nuclear physics என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது அதில் radio carbon dating என்ற உப தலைப்பில் carbon இன் half life period வேதியியல் பாடத்தில் 5700 years என்றும் இயற்பியல் பாடத்தில் 5570 என்றும் எழுதப்பட்டிருக்கிறது
. ஒரு ஆசிரியரிடம் சந்தேகம் கேட்டேன் . அவர் physics தேர்வுக்கு அப்படி எழுது chemistry தேர்வுக்கு இப்படி எழுது என்று சொன்னார் .
இதாவது பரவாயில்லை .தமிழில் உவமைக்கவிஞர் சுரதா வை வாழும் கவிஞர் என்றே எழுதச் சொல்கிறார்கள் .
இதனைக் கல்வித்துறை கவனிக்காதா? தவறானதை இவ்வளவு காலம் ஆசிரியர்கள் எப்படி ஏற்று நடத்துகிறார்கள் ? மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படாதா ? பிறகெப்படி நாங்கள் உணர்ந்து படிப்பது?அதுவும் பொதுத்தேர்வில் இப்படியா?
தவறானதைத் தான் நாங்கள் படிக்க வேண்டுமா ?இப்படி தவறானதை த் தான் திருத்துவார்களா ? எங்களுக்கு ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக மிக முக்கியமானதல்லவா?
இதை விடக் கொடுமை என்ன வென்றால் physics பா டத்தில் 5,9,10 ஆகிய பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. ஏனென்றால் ஒரு கேள்வி மட்டுமே அதிலிருந்து கேட்கப்படும். எனவே அதற்கு முக்கியத்துவம் இல்லை.
ஆனால் அந்தப் பாடம் தான் ECEஇஞ்சினியரிங் ல் மிகவும் முக்கியம் .பிறகெப்படி நாங்கள் கல்லூரி வகுப்புகளில் மிளிர்வோம் ? இவர்களே எங்களை இப்படி நடத்தினால் நாங்கள் என்ன செய்வது?இதற்கு யாரேனும் முயற்சி எடுத்து மாற்ற மாட்டார்களா ?
இப்படிக்கு படிக்க விரும்பும் மாணவி
. ஒரு ஆசிரியரிடம் சந்தேகம் கேட்டேன் . அவர் physics தேர்வுக்கு அப்படி எழுது chemistry தேர்வுக்கு இப்படி எழுது என்று சொன்னார் .
இதாவது பரவாயில்லை .தமிழில் உவமைக்கவிஞர் சுரதா வை வாழும் கவிஞர் என்றே எழுதச் சொல்கிறார்கள் .
இதனைக் கல்வித்துறை கவனிக்காதா? தவறானதை இவ்வளவு காலம் ஆசிரியர்கள் எப்படி ஏற்று நடத்துகிறார்கள் ? மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படாதா ? பிறகெப்படி நாங்கள் உணர்ந்து படிப்பது?அதுவும் பொதுத்தேர்வில் இப்படியா?
தவறானதைத் தான் நாங்கள் படிக்க வேண்டுமா ?இப்படி தவறானதை த் தான் திருத்துவார்களா ? எங்களுக்கு ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக மிக முக்கியமானதல்லவா?
இதை விடக் கொடுமை என்ன வென்றால் physics பா டத்தில் 5,9,10 ஆகிய பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. ஏனென்றால் ஒரு கேள்வி மட்டுமே அதிலிருந்து கேட்கப்படும். எனவே அதற்கு முக்கியத்துவம் இல்லை.
ஆனால் அந்தப் பாடம் தான் ECEஇஞ்சினியரிங் ல் மிகவும் முக்கியம் .பிறகெப்படி நாங்கள் கல்லூரி வகுப்புகளில் மிளிர்வோம் ? இவர்களே எங்களை இப்படி நடத்தினால் நாங்கள் என்ன செய்வது?இதற்கு யாரேனும் முயற்சி எடுத்து மாற்ற மாட்டார்களா ?
இப்படிக்கு படிக்க விரும்பும் மாணவி
Subscribe to:
Posts (Atom)